பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில் வெல்லம் விலை சரிவு: உற்பத்தியாளர்கள் கவலை
பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந் துள்ளனர்.
HIGHLIGHTS
பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந் துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்க லம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், ஏராளமான ஏக்கரில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.
இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை, பிலிக்கல்பாளையம் பகுதியில் உள்ள, வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை, அச்சு வெல்லங்கள் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏலச் சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் அங்கு வெல்ல ஏலச் சந்தை நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங் களில் இருந்தும் வியாபாரிகள் வந்து நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு வெல்லத்தை கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5,500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 1,000 மூட்டை அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டுவரப்பட்டது.
இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5,500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 1,000 மூட்டை அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டன. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,250 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.