ஜன. 1 முதல் நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி வார விழா
Namakkal news- ஜன. 1 முதல் நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி வார விழா நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் ஜன. 1ம் தேதி முதல் உலக அமைதி வார விழா நடைபெறுகிறது.
நாமக்கல் கோட்டையில், ஆஞ்சநேயர் கோயில் அருகில் மனவளக்கலை மன்ற அறிவு திருக்கோயில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இங்கு வருகிற ஜன. 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, ஓரு வாரம் உலக அமைதி வார விழா நடைபெறுகிறது. தினசரி மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை உலக அமைதி வார விழா நடைபெறும்.
ஜன. 1ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அயோத்தியப்பட்டினம் ராஜேந்திரன் கலந்துகொண்டு வெற்றியின் ரகசியம் என்ற தலைப்பில் பேசுகிறார். 2ம் நடைபெறும் நிகழ்ச்சியில் மோகனுர் டாக்டர் மாணிக்கவாசகம் கலந்துகொண்டு அறிவித்திருக்கோயிலின் அவசியம் என்ற தலைப்பில் பேசுகிறார். 3ம் தேதி நடைபெறும் விழாவில் சேலம் மண்டல தலைவர் உழவன் தங்கவேலு கலந்துகொண்டு சின்ன பாட்டு, சீர் பாட்டு என்ற தலைப்பில் பேசுகிறார். 4ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்க்கைக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது தவமா, தற்சோதனையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறுகிறது. ஆழியாறு இணை இயக்குனர் அருட்செல்வி தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில், கண்ணம்மாள், ரவீந்திரன், நாவலடிக்குமார், பாவை விஜயலட்சுமி, விமல்காந், சுப்பிரமணியம் ஆகியோர் பேசுகின்றனர்.
5ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில், சேந்தமங்கலம் ஜெயபால் கலந்துகொண்டு காந்தத்தத்துவம் என்ற தலைப்பில் பேசுகிறார். 6ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை சேர்மா செல்வராஜ் கலந்துகொண்டு புதிதாக பிறந்தோம் என்ற தலைப்பில் பேசுகிறார். 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில், வேலாயுதம்பாளையம் சுப்பையன் கலந்துகொண்டு வாழ்க்கை வாழ்வதற்க்கே என்ற தலைப்பில் பேசுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.