Monthly Shutdown Announcement வளையப்பட்டி பகுதியில் 24ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு
Monthly Shutdown Announcement நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதியில் வரும் 24ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Monthly Shutdown Announcement
நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் வழங்கிட, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில், வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி, வளையப்பட்டி துணை மின் நிலையத்தில், 24ம் தேதி காலை 9 மணி வரை மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு மற்றும் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில், 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.