/* */

கோடையில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நாமக்கல் நகராட்சி வேண்டுகோள்

கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் நகரட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

கோடையில் பொதுமக்கள் குடிநீரை  சிக்கனமாக பயன்படுத்த நாமக்கல் நகராட்சி வேண்டுகோள்
X

பைல் படம்

கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் நகரட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின், குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றை நீர் ஆதராமாகக் கொண்டு 2 குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. மோகனூர் மற்றும் ஜேடர்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம், தினசரி 19 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகராட்சிப் பகுதியில் உள்ள 20 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரைக்கொண்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நாமக்கல் நகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது கோடை காலம் என்பதால் பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 April 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  2. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  3. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  4. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  6. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  7. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  8. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...