/* */

கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு : 14ம் தேதி இலவச பயிற்சி

Namakkal news- நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய்  கட்டுப்பாடு : 14ம் தேதி இலவச பயிற்சி
X

Namakkal news- கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு குறித்து இலவச பயிற்சி (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 14ம் தேதி, கரும்பு பயிரில் இயற்கை முறையில் நோய் கட்டுப்பாடு என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 14ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, கரும்பில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப் பயிற்சியில் கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், வளர்ச்சியூக்கிகள் குறித்தும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்களும் தெளிவாக விளக்கி கூறப்படும்.

இந்த பயிற்சியில் விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள ஆட;வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Feb 2024 8:00 AM GMT

Related News