மோகனூர் அருகே புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
Namakkal news- மோகனூர் அருகே புதிய அங்கன்வாடி மையம் ராஜேஷ்குமார் எம்.பி. திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- மோகனூர் அருகில் புதிய அங்கன்வாடி மையத்தை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் எம்.பி. சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, அங்கு குழந்தைகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். பின்னர் பல்ஸ் போலியோ தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செயற்பொறியாளர் குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி அட்மா திட்ட தலைவர் நவலடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.