/* */

நாமக்கல்லில் ஆயுதப்படை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக, நாமக்கல் ஆயுதப்படை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஆயுதப்படை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ் வைஷ்ணவி.

குடும்ப பிரச்சினை காரணமாக, நாமக்கல் ஆயுதப்படை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), இவர் நாமக்கல் ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவர் விவாகரத்து ஆன நிலையில், ஈரோட்டில் பணிபுரிந்த போது உடன் பணிபுரிந்த போலீஸ்காரர் சேகர் என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சேகர் தற்போது நீலகிரி மாவட்ட காவல்றையில் பணிபுரிந்து வருகின்றார்.

பெண் போலீஸ் வைஷ்ணவி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய நிலையில், கடந்த மாதம் 22 ம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவர் நாமக்கல் கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் 28 ம் தேதி வாடகை வீட்டில் தனியாக இருந்த இருந்த வைஷ்ணவி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, பூச்சிக்கொல்லி மருந்தினை (விஷம்) குடித்து உள்ளார்.

பின்னர் அவராகவே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையில் சேர்ந்தர். தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்