/* */

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர காவிரி ஒழுங்காற்று குழுவிற்கு கோரிக்கை

Namakkal news-காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தராத, காவிரி ஒழுங்காற்று குழுவிற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. விரைவில் பெற்றுத் தர கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர காவிரி ஒழுங்காற்று குழுவிற்கு கோரிக்கை
X

Namakkal news-தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி.

Namakkal news, Namakkal news today- காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தராத, காவிரி ஒழுங்காற்று குழுவிற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவாசியிகள் சங்க தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஜன. 18ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜனவரி மாதத்திற்கு 2.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

நடப்பு நீர் பாசன ஆண்டின் கணக்குப்படி கர்நாடகம் இதுவரையில் காவிரியில் 166 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும் ஆனால் இதுவரை 75 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது மீதமுள்ள 91 டிஎம்சி தண்ணீரை நிலுவையில் வைத்துள்ளது. கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இருந்தும், கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரியில் உண்டான பங்கீட்டு நீரை தர மறுக்கிறது, இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நிலுவையில் உள்ள நீரை பற்றி யாதொரு அறிவிப்பும் இல்லாமல், வெறும் கண் துடைப்புக்காக, காவிரியில் ஜனவரி மாதத்திற்கு 2.76 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறக்க காவிரி மேலாண்மை வாரியத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

இது தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்படி தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி ஒழுங்காற்று குழுவின் செயலுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

வரும் காலங்களில் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை கர்நாடகம் வழங்க காவிரி ஒழுங்காற்று குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 Jan 2024 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...