Senior Citizen Home Inspection தொண்டு நிறுவன முதியோர் காப்பகம் மகளிர் ஆணையத் தலைவர் திடீர் ஆய்வு
Senior Citizen Home Inspection பரமத்தி வேலூர் அருகே செயல்பட்டு வரும், தனியார் தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தை, மாநில மகளிர் ஆணையத் தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
Senior Citizen Home இன்ஸ்பெக்ஷன்
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் அரசிடம் பதிவு பெற்று இயங்கி வருவதோடு அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களின் சேவைகளில் ஒன்றுதான் முதியோர் இல்லத்தை பராமரித்தல் ஆகும். இதனை அவர்கள் உரிய முறையில் இயக்கி வருகின்றார்களா? என அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்துவதோடு அங்கு தங்கியிருப்பவர்களின் குறைகளையும் கேட்டறிவதுண்டு. அந்த வகையில்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கொந்தளம் கிராமத்தில் வேர்டு தொண்டு நிறுவனத்தின் சார்பில், முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர்கள் இலவசமாக தங்க வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முதியோர் இல்லத்தை, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி திடீர் ஆய்வு செய்து, பார்வையிட்டார்.
காப்பகத்தில் உள்ள முதியவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறார்களா, அவர்களுக்கு தேவையான வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்றும், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, காலை, மதியம் மற்றும் இரவு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களிடம் அவர் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆதரவற்ற முதியோருக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பிரபா, அரசுத்துறை அலுவலர்கள், வேண்டு தொண்டு நிறுவன செயலாளர் சிவகாமவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.