வி.ஏ.ஓ., பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தி வழங்க கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை
Namakkal news- வி.ஏ.ஓ., பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தி வழங்க கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- வி.ஏ.ஓ. பதவி உயர்வு, 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கிராம ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், நாமக்கல் ஆர்.டி.ஓ.விடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கிராம உதவியாளர்கள் பெற்றுவந்த உரிமைகள் நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். 1999ல், வழங்கப்பட்டு, 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை, கடந்த மார்ச் 8 முதல் நிறுத்தப்பட்டது. அவற்றை திரும்ப வழங்க வேண்டும். சிபிஎஸ் பிடித்தம் செய்து இறந்துபோன, ஓய்வு பெற்றவர்களுக்கு பிடித்தம் செய்த தொகை வழங்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி, அரசு ஊழியர் பட்டியல் ‘டி’ பிரிவில் இணைக்க வேண்டி, 30 ஆண்டுகளாக கேட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு, 20 சதவீதம் என்பதை, 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டு என்பதை, 6 ஆண்டாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.