செல்லப்பம்பட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம்
Namakkal news- செல்லப்பம்பட்டியில் கூட்டுறவுத் துறை சார்பில், இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- செல்லப்பம்பட்டியில் கூட்டுறவுத் துறை சார்பில், இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கூட்டுறவின் சிறப்புகள் குறித்தும் சமுதாய வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு குறிததும் பேசினார். பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான கூட்டுறவு சங்க சார்பதிவாளர்கள், நிர்வாகிகள் மற்றும் செல்லப்பம்பட்டி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.