/* */

சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் நடந்த விபத்தில் 631 பேர் உயிரிழப்பு

ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் நடந்த விபத்தில் 631 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்

சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதே போல மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஓமலூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, காவல் ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் சரகத்தில் ஓமலூர், மேட்டூர், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, தர்மபுரி என 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 60 ஆயிரத்து 462 இருசக்கர வாகனங்கள், 8 ஆயிரத்து 800 4 சக்கர வாகனங்கள், பேட்டரி வாகனங்களில் 4 ஆயிரத்து 268 இருசக்கர வாகனங்கள், 128 4 சக்கர வாகனங்கள் என போக்குவரத்து விதி மீறல்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 9 கோடியே 55 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் சேலம் சரகத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த விபத்துகளில் 631 பேர் உயிரிழந்ததுடன் 4 ஆயிரத்து 118 பேர் காயமடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என கூறினர்.

Updated On: 26 Oct 2023 5:19 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு