/* */

சேலத்திலிருந்து வெள்ள நிவாரணமாக 3.50 டன் பால் பவுடர்கள் அனுப்பி வைப்பு

சேலத்திலிருந்து 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலத்திலிருந்து வெள்ள நிவாரணமாக 3.50 டன் பால் பவுடர்கள் அனுப்பி வைப்பு
X

நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரியை அனுப்பி வைக்கும் ஆட்சியர் கார்மேகம்.

சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (07.12.2023) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் "மிக்ஜம்" புயல் சீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட 3.50 டன் பால் பவுடர்கள், 70,000 பிஸ்கட் பாக்கெட், 55,000 குடிநீர் பாட்டில்கள், 25,000 பால் பாக்கெட், 15,000 பிரெட் மற்றும் பன் பாக்கெட், 1,000 ஜூஸ் பாக்கெட், அரிசி, ரவை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய 500 தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மெழுகுவர்த்திகள், துண்டுகள், தீப்பெட்டிகள், போர்வைகள், நாப்கின்கள், லுங்கிகள், நைட்டிகள், பேஸ்ட், பிரஷ் உள்ளிட்ட நிவாரணத் தொகுப்புகள் சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் அட்டைப்பெட்டிகளில் முறையாக அடுக்கி அனுப்பும் பணி இரவு பகலாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய 7வது லாரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இன்று வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கு ஏற்ப சென்னைக்கு நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் இணைந்து இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கீதாபிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவளார் இரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியினை இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Dec 2023 7:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்