/* */

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
X

தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முடிந்திருத்தும் தொழிலாளர்கள்.

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் முடி திருத்தும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயில் நுழைவுத் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் உரிமம் பெற்ற முடி திருத்தும் ஊழியர்களுக்கு கோயில் நிர்வாகம் வழங்க வேண்டிய பங்குத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும், முடி திருத்தும் ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் முடி திருத்தும் ஊழியர்கள் உள்பட சிஐடியூ சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவர் வீரையா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சேதுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராஜு, உள்ளாட்சி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், பொது தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வேங்கைய்யா, மருத்துவர் சமுதாயப் பேரவை நிர்வாகிகள் சுப்பிரமணியன், அழகர்சாமி, கண்ணன், கருப்புசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பேசி கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என, போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

அதன்பின், போராட்டத்தை கைவிட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என முடி திருத்தும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 12 March 2024 6:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு