சென்னையில் வரும் 27ம் தேதி ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் வரும் 27ம் தேதி ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு (மாதிரி படம்)
பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் டிசம்பா் 27 ஆம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிபிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்ளை நடத்தி வருகிறோம். கடந்த அதிமுக மற்றும் தற்போதைய திமுக ஆட்சியிலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியா்களின் கோரிக்கை நிறுவேற்றப்படும் என்றனா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எங்களுக்கு வழங்கப்படும் ரூ.10 ஆயிரம் மாத ஊதியத்தில் அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன் டிசம்பா் 27 -ம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் போராட்டத்தின் மூலமாக தீா்வு கிடைக்காவிட்டால் வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu