/* */

தனியார் தோட்டத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள ராஜநாகம்

கடையம் அருகே தனியார் விவசாய பண்ணையில் 15 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது.

HIGHLIGHTS

தனியார் தோட்டத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள ராஜநாகம்
X

தனியார் தோட்டத்தில் பதுங்கி இருந்த ராஜநாகத்தை பிடித்த வனத்துறையினர்.

தென்காசி மாவட்டம், மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது.பல்லூயிர் காடுகளான கா மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே வாழும் ராஜநாகம் அதிகமாக இப் பகுதியில் காணப்படுகிறது.

இந்நிலையில் கடையம் அருகேயுள்ள கோவிந்தபேரி என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்வதை பண்ணையில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர் உடனே கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பெயரில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வன காவலர்கள் கண்ணன், பசுங்கிளி, வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், மாரியப்பன், மனோகரன், சக்திமுருகன் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

புதரில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளமுள்ள ஆண் ராஜநாக பாம்பை அவர்கள் போராடி மீட்டனர். தொடர்ந்து கோவிந்த பேரி பீட்டிற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் ராஜநாகப் பாம்பை பத்திரமாக விட்டனர். ஏற்கனவே சமீபத்தில் பாபநாசம் பகுதியில் இதுபோன்ற ராஜநாகம் ஒன்று பிடிக்கப்பட்டது. தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் இதுபோன்று தொடர்ச்சியாக ராஜநாகம் பாம்பு பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Nov 2023 7:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...