/* */

தென்காசியில் வெயிலின் கொடுமையை சமாளிக்க வித்தியாசமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர்

தென்காசியில் வெயிலின் கொடுமையை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னங்கீற்று கட்டி உள்ளார்.

HIGHLIGHTS

தென்காசியில் வெயிலின் கொடுமையை சமாளிக்க வித்தியாசமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர்
X

வெயில் கொடுமை தாங்க முடியாமல் இருப்பதால் ஆட்டோ மீது  தென்னங்கீற்று  கட்டி வைத்த ஆட்டோ ஓட்டுனர்.

வெயிலின் கொடுமை சமாளிக்க தென்காசியில் வித்தியாசமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னங்கீற்று கட்டி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்க உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் , பல்வேறு தரப்பினர் தண்ணீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் 102 டிகிரி வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. வெப்பத்தை சமாளிக்கும் வகையிலும், தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசையை சேர்ந்த ராஜசேகர் என்கிற ஆட்டோ உரிமையாளர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னை ஓலையிலான இரட்டை தட்டி கட்டி ஆட்டோவின் மேல் பகுதியில் அமைத்து வெயிலின் தாக்கம் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளை தாக்கக் கூடாது என்பதற்காக செய்துள்ள செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், ராஜசேகரின் ஆட்டோவிற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

வெயில் தாக்கம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பல கூறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 May 2024 10:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்