/* */

குற்றாலம் சித்திரை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் விசு திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குற்றாலம் சித்திரை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் விசு திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது பல ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றாலநாதர் திருக்கோயில் தென் மாவட்டங்களில் உள்ள சிறப்புமிக்க புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பஞ்ச சபையில் ஒன்றான சித்திர சபை இங்கு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாக்கள் அனைத்தும் சித்திரசபையை அமைந்துள்ள ரதவீதிகளில்நடைபெறும். அகத்திய முனிவரால் பெருமாள் சிலையை லிங்கமாக மாற்றியதாக கோயில் தலபுராணம் கூறுகிறது. பல்வேறு அரிய வகை மூலிகைகளை கொண்டு வரையப்பட்ட மூலவருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாவராதனை விசேஷமான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் குற்றாலநாதர் கோவிலில் கடந்த ஐந்தாம் தேதி சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அன்றிலிருந்து தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் என தினமும் நடைபெற்று வந்தது. விழாவின் ஐந்தாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

நான்கு தேர்களான விநாயகர் தேர், முருகன் தேர், குழல்வாய்மொழி அம்மை தேர், நடராஜர் தேர் பக்தர்களால் ஒன்றன்பின் ஒன்றாக வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மேளதாளங்கள் இசை முழங்க, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Updated On: 9 April 2024 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு