/* */

மோடி ஹீரோ அல்ல ஜீரோ - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வர்ணனை

மோடி ஹீரோ அல்ல ஜீரோ என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வர்ணனை செய்துள்ளார்.

HIGHLIGHTS

மோடி ஹீரோ அல்ல ஜீரோ - திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணி வர்ணனை
X

தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி.

கச்சத்தீவு விவகாரத்தில் மோடி ஹீரோ இல்லை எனவும் அவர் ஜீரோவாகவே உள்ளார் என கூறியதோடு, பாஜக தமிழகத்தில் வழக்கம்போல நோட்டாவிடம் மட்டுமே போட்டியிடுவதாக திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் அமைந்துள்ள வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து தென்காசி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைந்தால் ஜனநாயகத்தின் நடைபெறும் கடைசி தேர்தலாக அமையும் என்றார்.

கச்சத்தீவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் பத்திர முறைகேடு குறித்த பிரச்சனைகள் எழுப்பி வரும் நிலையில் அதனை திசை திருப்பும் விதமாக பாஜக அரசு கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்து குற்றம் சாட்ட மோடிக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மோடி ஹீரோவாக இல்லை எனவும் ஜீரோவாக உள்ளார் எனவும் தெரிவித்தார். அந்த வகையில் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கும் வேலை என கூறினார்.

மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை வெளியிடும் ஆதாரங்கள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லை பொய் சாட்சி சொல்லும் வேலையாக உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், தழிழகத்தில் வழக்கம்போல பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் சூழலே உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி வரும்பொழுதெல்லாம் யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என பிரச்சாரம் செய்து வருகிறார் அது அவ்வாறு இல்லை எனவும் தங்களைத் தவிர யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என்பதே உண்மை என தெரிவித்தார்.

Updated On: 3 April 2024 8:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!