/* */

மழை நின்று ஒரு வாரம் ஆகியும் ‛பளிச்’என பொங்கி வரும் புதுவெள்ளம்

தேனி வீரப்பஅய்யனார் ஓடையில் மழைநீர் கண்ணாடி போல் சுத்தமாக வந்து கொண்டிருக்கிறது

HIGHLIGHTS

மழை நின்று ஒரு வாரம் ஆகியும் ‛பளிச்’என பொங்கி வரும் புதுவெள்ளம்
X

கண்ணாடி போல் ஓடி வரும் ஓடை நீரில் ஆட்டம் போடும் சிறுவர்கள் 

தேனியில் மழை கடந்த ஒரு வாரமாக பெய்யவில்லை. இருப்பினும் வீரப்ப அய்யனார் கோயில் ஓடையில் மழையில் இருந்து வரும் புது வெள்ளம் ‛பளீச்’ என மாசு எதுவும் இல்லாமல் சுத்தமாக வருகிறது. இந்த நீரில் சிறுவர்கள் குளித்து விளையாடுகின்றனர்.

தேனியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் மலை அடி வாரத்தில் உள்ளது வீரப்ப அய்யனார் கோயில் இந்த கோயிலுக்கு அருகில் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஆறு போல் ஓடிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு பல மாதங்கள் இந்த ஒடையில் தண்ணீர் இருக்கும். மிகவும் வறண்ட காலங்களில் மட்டுமே இந்த ஓடையில் தண்ணீர் வற்றும். மழை பெய்யும் போது வெள்ளமும் வரும்.

தேனி பகுதியில் மழை பெய்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டது. அவ்வப்போது சிறு, சிறு துாறல்கள் மட்டுமே பெய்கிறது. இருப்பினும் வீரப்பஅய்யனார் கோயில் ஓடையில் தண்ணீர் பொங்கி வருகிறது. இந்த தண்ணீர் மிகவும் சுத்தமாக கண்ணாடி போல் உள்ளது.

குளிர்ச்சியுடனும், சுத்தத்துடனும் இருப்பதால் சிறுவர்கள் இந்த ஓடையில் குளித்து விளையாடுகின்றனர். இது குறித்து இங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், தற்போது கோயிலுக்கு தினமும் அதிகளவு பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். ஓடையில் வரும் தண்ணீர் பக்தர்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது என்றனர்.

Updated On: 10 Dec 2023 4:09 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  2. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  3. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  4. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  5. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  6. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  9. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  10. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...