/* */

Palm Seeds Transplantation கடம்பாகுளம் பகுதியில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி தீவிரம்

Palm Seeds Transplantation தூத்துக்குடி மாவட்டம், கடம்பாகுளம் கடரை பகுதியில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

Palm Seeds Transplantation  கடம்பாகுளம் பகுதியில் பனைமர   விதைகள் நடவு செய்யும் பணி தீவிரம்
X

பனைமர விதைகள் நடவு செய்யும் பணியை இந்தியன் ஆயில் நிறுவன முதுநிலை மேலாளர் ரஞ்சித் குமார் தொடங்கி வைத்தார்.

Palm Seeds Transplantation

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளின் கரையோரங்களில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அங்கமங்கலம் ஊராட்சியுன் இணைந்து கடம்பாகுளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி பல்வேறு கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக நடைபெற்ற பனைமர விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதுநிலை மேலாளர் ரஞ்சித் குமார், உதவி மேலாளர் சிவக்குமார், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்ரியா பாலமுருகன் ஆகியோர் இணைந்து பனை மர விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி முன்னிலை வைத்தார். இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டலச் செயலாளர் இம்மானுவேல், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா, பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குநர் ஜென்சி உட்பட பல கலந்து கொண்டனர். முடிவில் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் பனைமர விதைகளை தொடர்ந்து விதைத்தனர்.

Updated On: 9 Dec 2023 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்