/* */

ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
X

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது காட்டுவெங்கடாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயி மோகன். இவருக்கு சொந்தமான நிலமும், கோழிப்பண்ணையும் ஊரை ஒட்டி உள்ளது. மோகன் குடும்பத்தார் இன்று அவரது வீட்டை ஒட்டி உள்ள நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்து கூச்சலிட்டுள்ளனர்.

மேலும் வாணியம்பாடி வனச்சரகர் குமாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாதகடப்பா பகுதியில் இருந்து வனத்துறையினர் வர தாமதமானது. இதனால் விவசாயி மோகன் அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் துணையுடன், பாதுகாப்பாக மலைப்பாம்பை பிடித்தனர்.

பின்னர் அங்கு வந்த வனக்காப்பாளர் தினேஷ்குமாரிடம் பிடித்த மலைப்பாம்பை ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு அரங்கல்துருகம் அருகே உள்ள காரப்பட்டு காப்பு காட்டில் விடப்பட்டது.

Updated On: 7 Dec 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு