/* */

திருப்பூரில் 90 சதவீத பஸ்கள் இயங்கின; போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

Tirupur News- போக்குவரத்து தொழிலாளா்கள் வேலை நிறுத்த நாளில், திருப்பூரில் 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் 90 சதவீத பஸ்கள் இயங்கின; போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
X

Tirupur News- கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியா்கள், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சாா்பில் வேலை நிறுத்தம் நடந்துவரும் நிலையில், திருப்பூா் மண்டலத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இயக்கப்பட்டதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில், திருப்பூா் மண்டலத்தில் தொமுச மற்றும் இதர தொழிற்சங்கங்களைச் சாா்ந்த ஓட்டுநா், நடத்துநா்களை வைத்து முழுமையாகப் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருப்பூா் மண்டலத்தில் திருப்பூா் 1, திருப்பூா் 2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, பழனி 1, பழனி 2 ஆகிய 8 பணிமனைகளில் இருந்து 254 நகரப் பஸ்கள், 295 வெளியூா் பஸ்கள் என மொத்தம் 549 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடங்கிய முதல்நாளான செவ்வாய்க்கிழமை காலை முதலே திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அரசுப் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. திருப்பூா் மண்டலத்தில் 446 அரசுப் பஸ்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டதாக போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அண்ணா தொழிற்சங்க திருப்பூா் மண்டலத் தலைவா் ரவீந்திரன் கூறுகையில், ‘திருப்பூா் மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 90 சதவீத அரசுப் பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் பிற்பகலில் 60 சதவீத அளவுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. தொழிலாளா்களில் சுமாா் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு வரவில்லை. இந்த எண்ணிக்கை வரும் புதன்கிழமை முதல் அதிகரிக்கும்’ என்றாா்.

பழைய பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு:

திருப்பூா் பழைய பஸ் ஸ்டாண்டில் அரசுப் பஸ்களை இயக்கிய ஓட்டுநா், நடத்துநா்களிடம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். மேலும், தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பஸ்களை இயக்கக்கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, பஸ்களை இயக்கிய ஓட்டுநா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு போலீசார் தொழிற்சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியத்தை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் திருப்பூா் பழைய பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, ஏடிபி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் காங்கயம் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்கத்தினரை உடனடியாக பேச்சுவாா்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை தீா்க்க முன்வர வேண்டும் என அவா்கள் கோஷங்களை எழுப்பினா். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 10 Jan 2024 7:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு