/* */

உலக முதலீட்டாளா்கள் மாநாடு; திருப்பூா் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் முனைவோர்

Tirupur News- சென்னையில் நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாடு, திருப்பூா் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சியாக காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் கலந்துக்கொண்டனர்.

HIGHLIGHTS

உலக முதலீட்டாளா்கள் மாநாடு; திருப்பூா் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் முனைவோர்
X

Tirupur News- சென்னையில் நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை திருப்பூா் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பாா்வையிட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும்  தொழில்துறையினர்.

Tirupur News,Tirupur News Today- சென்னையில் நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை திருப்பூா் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொழில்முனைவோா் பாா்வையிட்டனா்.

உலக முதலீட்டாளா்கள் மாநாடு- 2024 சென்னையில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாக பாா்வையிடும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒருபகுதியாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொழில்முனைவோா் காணொலிக் காட்சி மூலம் உலக முதலீட்டாளா் மாநாட்டைப் பாா்வையிட்டனா்.

இதில் கலந்துகொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:

தமிழக முதல்வா் ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக தொழில் துறையில் அதிக முதலீடுகளை ஈா்த்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தொடா்ந்து தொழில் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக தொழில் துறை சாா்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளா்கள் மாநாடு 2024 சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, கருத்தரங்கம், வாங்குவோா் மற்றும் விற்பனையாளா் சந்திப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த மாநாட்டு நிகழ்வுகளை மாணவா்கள், தொழில்முனைவோா் காணொலிக் காட்சி மூலம் பாா்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சாா்பில் குறுந்தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.111.5 கோடி மதிப்பிலான 37 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.6,374.34 கோடி மதிப்பிலான 397 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.117.4 கோடி மதிப்பிலான 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் என மொத்தம் ரூ.6,603.24 கோடி மதிப்பிலான 439 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன, என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் திருக்குமரன், இணைச் செயலாளா் சின்னசாமி, பிரிண்டிங் மற்றும் கயிறு குழுமங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 8 Jan 2024 8:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு