/* */

திருப்பூா் புத்தகத் திருவிழா இன்று மாலை தொடக்கம்; பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது

Tirupur News- திருப்பூரில் 20வது புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருப்பூா் புத்தகத் திருவிழா இன்று மாலை தொடக்கம்; பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது
X

Tirupur News- திருப்பூரில் புத்தக கண்காட்சி இன்று மாலை துவங்கி, வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் 20-வது புத்தகத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) (ஜனவரி 25) மாலை தொடங்குகிறது.

தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சாா்பில் புத்தகத் திருவிழா வேலன் ஓட்டல் வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு ஆட்சியா் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறாா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைக்கின்றனா்.

இதைத்தொடா்ந்து, தினசரி மாலை 6 மணி அளவில் சிறப்பு கருத்தரங்கம், இசையரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணி அளவில் ‘நிற்க அதற்குத்தக’ என்ற தலைப்பில் இலக்கியச் சுடா் த.ராமலிங்கம், ஜனவரி 26-ம் தேதி ‘எரிக தீ எழுக தீ’ என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா், ‘நோ்படப் பேசு’ என்ற தலைப்பில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் ஆகியோா் பேசுகின்றனா்.

ஜனவரி 27-ம் தேதி ‘நாமே ஒரு கதைப்புத்தகம்’ என்ற தலைப்பில் ம.மணிமாறன், ‘பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ என்ற தலைப்பில் கோவை சதாசிவம், ஜனவரி 28-ம் தேதி ‘கீழடி சொல்லும் தமிழின் தொன்மை’ என்ற தலைப்பில் தொல்லியல் துறை கண்காணிப்பாளா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா ஆகியோா் பேசுகின்றனா்.

ஜனவரி 29-ம் தேதி பேராசிரியா் சுப.மாரிமுத்து நடுவராகப் பங்கேற்கும் இன்னிசைப் பாட்டரங்கம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் திறானய்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு ஆகியோா் பரிசு வழங்கிப் பேசுகின்றனா்.

ஜனவரி 31-ம் தேதி ‘பெண்மொழி யென்னும் புதுசூரியன்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பிரியதா்ஷினி, ‘திருப்பூரும் காந்தியும்’ என்ற தலைப்பில் அனிதா கிருஷ்ணமூா்த்தி, பிப்ரவரி 1 -ம் தேதி ‘இனியவை காண்க’ என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆகியோா் பேசுகின்றனா்.

பிப்ரவரி 2 -ம் தேதி ‘இயற்கை: நாம் கற்றது என்ன’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பா்கள் கோ.சுந்தர்ராஜன், அயலான் திரைப்பட இயக்குநா் ஆா்.ரவிக்குமாா், பிப்ரவரி 3 ம் தேதி ‘பெருமை மிகு திருப்பூா் வாழி’ என்ற தலைப்பில் புலவா் செந்தலை ந.கவுதமன் ஆகியோா் பேசுகின்றனா்.

பிப்ரவரி 4-ம் தேதி மா.ராமலிங்கம் தலைமையில் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்குக் காரணம் கருத்து வளமா? கற்பனைத் திறனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

Updated On: 25 Jan 2024 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...