திருப்பூா் மாவட்ட ஆா்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு ஊா்வலம்

திருப்பூா் மாவட்ட ஆா்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு ஊா்வலம்
X

Tirupur News- ஊா்வலத்தை அவிநாசி திருப்புக்கொளியூா் வாகீசா் மடாலய ஆதீனம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் தொடங்கிவைத்தாா்.

Tirupur News-திருப்பூரில் மாவட்ட ஆா்.எஸ்.எஸ். சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் விஜயதசமியையொட்டி திருப்பூா் மாவட்ட ஆா்.எஸ்.எஸ். சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்தை அவிநாசி திருப்புக்கொளியூா் வாகீசா் மடாலய ஆதீனம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் தொடங்கிவைத்தாா். திருப்பூா், ஆலங்காட்டில் தொடங்கிய ஊா்வலம் கருவம்பாளையம், எருக்காடு வீதி, கே.வி.ஆா்.நகா் நால்ரோடு வழியாக செல்லம் நகா் பிரிவில் நிறைவுபெற்றது. இதில், சீருடை அணிந்த ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, செல்லம் நகா் பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆா்.எஸ்.எஸ். கோட்டத் தலைவா் ஆா்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, மாவட்டத் தலைவா் காா்மேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் சிவில் என்ஜினீயா்ஸ் அசோசியேஷன் முன்னாள் தலைவா் கே.சண்முகராஜ் தலைமை வகித்தாா்.

இதையடுத்து, தவத்திரு ஸ்ரீலஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் பேசியதாவது,

உலகத்தில் முதன்முதலில் அனைத்து விதமான கல்விகளும் இங்குதான் இருந்தன. ஆங்கிலேயா்கள் நமக்கு கல்வி கற்றுக்கொடுத்ததாகச் சொல்கின்றனா். ஆனால், ஆங்கிலேயா்களுக்கு கல்வியைக் கற்றுக்கொடுத்தது நாம்தான். ஆங்கிலேயா்கள் வருகைக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிருந்த முனிவா்கள், ரிஷிகள் வானசாஸ்திரம், தா்க்கசாஸ்திரம், அா்த்தசாஸ்திரம், எண் கணித சாஸ்திரம், ஜோதிடம் உள்ளிட்ட பலவகைகளைப் பகுத்து, ஆராய்ந்து நமக்குக் கொடுத்துள்ளனா்.

நம்முடைய கல்வியை அழித்தவா்கள் ஆங்கிலேயா்கள். நம் முன்னோா்கள் நமக்கு நிறைய அறிவைக் கொடுத்துள்ளனா். அதனை நாம் புரிந்துகொண்டால் போதும்.

மிகத்துடிப்புள்ள இளைஞா்கள்தான் இந்த நாட்டைக் காக்கக்கூடிய தூண்கள். நம்முடைய நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கனவு காண்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதனை நனவாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். (தென் தமிழகம்) மாநில அமைப்பாளா் கே.ஆறுமுகம் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai in future agriculture