/* */

திருப்பூர்; உடுமலை அருகே நூற்பாலையில் தீ விபத்து

Tirupur News- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

HIGHLIGHTS

திருப்பூர்; உடுமலை அருகே நூற்பாலையில் தீ விபத்து
X

Tirupur News-  உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. 

Tirupur News,Tirupur News Today-உடுமலை அருகே உள்ள முக்கோணம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், பூலாங்கிணறு அருகே முக்கோணம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வரும் இந்த நூற்பாலையில் உள்ள நூல் கிடங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமாா் 9 மணி அளவில் திடீரென தீப் பிடித்தது. தகவல் அறிந்ததும் உடுமலையில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் தலைமையில் சென்ற வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால், நான்கு பக்கமும் அடைக்கப்பட்டிருந்த நூல் கிடங்கில் தீ மளமளவென பரவி எரிந்து கொண்டிருந்தது. இதனால் பொள்ளாச்சியில் இருந்தும் தீயணைப்புத் துறை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். மேலும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீா் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாலை 4 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நூல், இயந்திரங்கள் சேதமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்தால் பல கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தும், பல மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராட்டமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் கூறியதாவது:

சுமாா் 6 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட அந்தக் கிடங்கில் பாலியெஸ்டா் நூல் பேல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை எளிதில் தீப்பற்றும் என்பதால் தீயை அணைப்பது பெரிய சவாலாக இருந்தது. முதல் கட்ட விசாரணையில் மின்சாரக் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது, என்றாா்.

Updated On: 3 Jan 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை