/* */

உடுமலை அமராவதி அணையில் சுற்றுலாவை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு; கிடப்பில் போடப்பட்ட மக்கள் கோரிக்கை

Tirupur News- உடுமலை அமராவதி அணையில் அடிக்கடி ஆய்வு நடத்தும் அதிகாரிகள் குழு, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வெறும் ஆய்வு மட்டுமே நடத்தி வருவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

HIGHLIGHTS

உடுமலை அமராவதி அணையில் சுற்றுலாவை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு; கிடப்பில் போடப்பட்ட மக்கள் கோரிக்கை
X

Tirupur News- அமராவதி அணையில் ஆய்வு நடத்திய அதிகாரிகள் குழு.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி சுற்றுலா மையத்தை மேம்படுத்த, சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில், அமராவதி அணை அமைந்துள்ளது. மிக நீளமாக அமைந்துள்ள அணைப்பூங்கா, படகு சவாரி, அரிய வகை கள்ளி வகைகளை கொண்ட பாறை பூங்கா, வனத்துறை முதலைப்பண்ணை என, சுற்றுலா மையமாக அமைந்துள்ளது.

பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து, ஆண்டுக்கு ஏறத்தாழ, ஒரு லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா வாயிலாக, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், அமராவதி அணை பூங்காவில் பராமரிப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. பூங்கா மற்றும் இதர பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. சுற்றுலா மையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமராவதி அணைப்பூங்காவில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து, திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரவிந்த், ஆண்டிய கவுண்டனுார் ஊராட்சித்தலைவர் மோகனவள்ளி, கல்லாபுரம் ஊராட்சித்தலைவர் முத்துலட்சுமி, ராஜசேகரன், பழனிச்சாமி, மானுப்பட்டி அரவிந்த், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சங்க தலைவர் குளோபல் பூபதி, நவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.5 கோடியில் பணிகள்

மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறியதாவது,

திருப்பூர் மாவட்டத்தில் முதன்மை சுற்றுலாத்தலமாக உள்ள அமராவதி அணை பூங்காவை சுற்றுலாத்துறை வாயிலாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறை வாயிலாக, ரூ.5 கோடி மதிப்பில், சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு பெறப்பட்டுள்ளது.

அதில், குடிநீர், கழிவறை வசதிகள், சிறுவர் பூங்கா, கம்பி வேலி அமைத்தல், குப்பைத்தொட்டி, வழிகாட்டி பலகைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண மின் விளக்குகள், தோட்டம் சீரமைத்தல், அழகிய சுவர் ஓவியங்கள், புகைப்பட கண்காட்சிகள், நடைபாதை, சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசுக்கு, இந்த கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான அனுமதி பெறப்பட்டு, சுற்றுலா மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, தெரிவித்தார்.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான அமராவதி அணையில் சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்தப்படும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 24 Jan 2024 7:29 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...