/* */

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்
X

காட்சி படம் 

கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ம் தேதியும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5-ம் தேதியும் வகுப்புகள் தொடங்க உள்ளன.

இதையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2023-24ம் ஆண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உபகரணங்கள் எல்லாம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 157 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

முதல்கட்டமாக, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி களுக்கு ஓரிரு நாட்களில் புத்தகங்கள் வழங்கப்படும்.

அதோடு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை எல்லாம், பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, மாவட்டத்தில் இயங் கும் 779 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 21 May 2023 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...