/* */

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடியுடன் வந்து தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த இருபதாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 27ஆம் தேதி கடைசி நாள்.

இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார். அமைச்சர் பொன்முடி. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்து அலுவலரும், மாவட்ட ஆட்சியர் பழனியிடம் ரவிக்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் பொன்முடி. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சியின் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ரவிக்குமார் மீண்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐந்தாம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் தொகுதிக்கு வர உள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளார்

இந்த பிரச்சாரங்களின் மூலமாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ரவிக்குமார் வெற்றி பெறுவார் என்று கூறினார்

அதனைத் தொடர்ந்து செய்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார் கூறுகையில், இந்த கூட்டணியை வழி நடத்தும் கட்சியான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்த கூட்டணியை சேர்ந்த 39 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

Updated On: 26 March 2024 8:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...