/* */

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 659 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

ஆட்சியர் கிராந்திகுமார் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 659 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுவதாகவும், இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகளும் தேர்வு எழுதுவதாக தெரிவித்தார். மன அழுத்தம் இன்றி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் கூறியதையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கோவை மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற 5 ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 March 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்