/* */

பொங்கல் பரிசு தொகை ரூ. 1.22 லட்சம் கையாடல்: ரேசன் கடை ஊழியர் மீது வழக்கு

ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்து தலைமறைவான ரேஷன் கடை ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பொங்கல் பரிசு தொகை ரூ. 1.22 லட்சம் கையாடல்: ரேசன் கடை ஊழியர் மீது வழக்கு
X

சாய்பாபா காலனி காவல் நிலையம் (கோப்பு படம்).

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கடந்த 10ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4942 ரேஷன் கார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்களிடம் பணம் வழங்கப்பட்டு இருந்தது. இதில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 876 கார்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 ஆயிரத்து 66 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அந்தந்த ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீதமுள்ள தொகையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி என்ற ரேஷன் கடையில் விற்பனையாளாராக பணியாற்றும் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மதியரசு என்பவர் பொங்கல் பரிசு தொகை பணத்தை திரும்ப செலுத்தாதது தெரியவந்தது.

இது குறித்து அமுதம் அங்காடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 841 குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும், 122 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வாங்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானார். இது குறித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியரசு மீது சாய்பாபா காலனி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மதியரசுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகையை கையாடல் செய்த ரேசன் கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Jan 2024 7:22 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...