/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்

ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில்  வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்
X

ஸ்டார்ங் ரூமிற்கு சீல் வைப்பு.

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது.

கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் இயந்திரங்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்ககப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டிராங் ரூம் மற்றும் கல்லூரி வளாகம் என அனைத்தும் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் சீல் வைக்கும் பணிகளின் போது நேரில் இருந்தனர். பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணியினை பார்வையிட வரவில்லை.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதிகளில் இருப்பதற்கும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், அதுவரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 April 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை