/* */

ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட அரசமரம்!

ஈரோட்டில் கோடை வெயில் தாகத்தை உணர்ந்து பழமையான மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட தனியார் தொண்டு அமைப்பின் சேவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட அரசமரம்!
X

வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட அரசமரம்.

ஈரோட்டில் கோடை வெயில் தாகத்தை உணர்ந்து பழமையான மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்ட தனியார் தொண்டு அமைப்பின் சேவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 107 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் முன்பு இல்லாத வகையில் கோடை வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வெயிலால் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. இந்த சூழலில் திண்டல் பகுதியில் சாலையோரம் உள்ள 25 ஆண்டுகள் பழமையான அரச மரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக அப்புறப்படுத்த திட்டமிட்ட நிலையில் அந்த மரத்தினை வேரோடு அப்புறப்படுத்த தனியார் தொண்டு அமைப்பினர் திட்டமிட்டனர்.


இதனையடுத்து, கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு 5 மணி நேர போராட்டத்திற்கு வேரோடு மரத்தினை எடுத்து 10 கி.மீ தொலைவில் உள்ள நசியனூர் பகுதியில் உள்ள நந்தவனத்தில் நட்டு மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்தனர். இதனால் வெயில் தன்மை உணர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியில் இறங்கியதாக தனியார் தொண்டு அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் இது போன்று மரத்தினை வேரோடு எடுத்து வைக்க மாவட்ட நிர்வாகம் போதுமான ஜேசிபி உபகரணங்கள் வழங்கினால் பழமையான மரங்கள் பாதுகாக்கப்படும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 27 April 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?