/* */

ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

HIGHLIGHTS

ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
X

தகிக்கும் வெயில்.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள்வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பின்னர், மார்ச், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்த படிப்படியாக அதிகரித்த வெயிலின் தாக்கத்தால் மதிய நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடியே காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வருகிறார்கள். ஈரோட்டில் நேற்று முன்தினம் 109.4 டிகிரி வெயில் பதிவானது. இது, நடப்பு கோடை காலத்தில் 2வது முறையாக உச்சம் தொட்டுள்ள வெயிலின் அளவாகும்.

இந்நிலையில், நேற்று 107.6 டிகிரி வெயில் பதிவான நிலையில், 2வது நாளாக இன்று 107.6 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இந்த கடும் வெயில் காரணமாக காலை 11 மணி முதலே வெப்ப அலை வீசியது. இதனால் சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தில் ஆழ்ந்தனர். மேலும், வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி, ஏர்கூலர் இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதால் ஈரோடு மாவட்ட மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தூக்கத்தை தொலைத்து திணறி வருகின்றனர்.

Updated On: 24 April 2024 1:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்