/* */

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
X

எலுமிச்சை பழங்கள்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே ஈரோட்டில் தான் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது. இதனால், பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால், சாலைகள் மற்றும் வீதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றால் முகத்தில் வெந்நீரை ஊற்றியது போல் உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் உடலுக்கு குளிச்சி தரும் உணவுகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பழச்சாறு, கம்பங்கூழ், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை தினந்தோறும் குடித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் வரை வரத்தான எலுமிச்சை பழம், தற்போது ஒரு டன்னுக்கும் குறைவாகவே வருகிறது.

வெயிலின் தாக்கம் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக எலுமிச்சை பழம் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆனது. இதேபோல், ஒரு எலுமிச்சை பழம் ரூ.6, ரூ.7-க்கு விற்பனையான நிலையில் , தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 2 May 2024 3:48 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...