பாஜக சார்பில் பரமத்தி பகுதியில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் அழைப்பிதழ் வழங்கும் விழா
Ramar Temple Invitation Disbursed நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் அர்ச்சனை செய்து, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிசேக அழைப்பிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
Ramar Temple Invitation Disbursed
பாஜக சார்பில், பரமத்தி ஸ்ரீ கோதண்டராமர் கோயில் வளாகத்தில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிசேக விழா அழைப்பிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
உ.பி. மாநிலம் அயோத்தில், சரயு நதிக்கரையில் உள்ள, ஸ்ரீ ராமஜென்ம பூமியில், ஸ்ரீ ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கும்பாபிசேக விழா வருகிற ஜன. 22ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவை, இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் குடும்ப விழாவாக எண்ணி கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஒவ்வொருவரது வீட்டிலும், 5 முதல் 7 விளக்குகளை ஏற்றி ராம நாமம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடகொண்டாடும் வகையில், பாஜக சார்பில், அனைவருக்கும் அட்சதை மற்றும் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வீடு வீடாக சென்று கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஸ்ரீ கோதண்டராமர் கோயில் வளாகத்தில் அழைப்பிதழ் வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ், பாஜக பிரமுகர்கள் அட்வகேட் காந்தி மற்றும் பரமத்தி ரவிச்சந்திரன், அருண்குமார், சுரேஷ், மோகன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆன்மீக தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பரமத்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, வீடு வீடாக சென்று ஸ்ரீ ராமர் கோயில் அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கப்பட்டது. திரளான பாஜக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.