நாமக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி துவக்கம்
Namakkal news-நாமக்கல்லில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
நாமக்கல் நகராட்சி பார்க் ரோட்டில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி துவக்க விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கண்காட்சியை துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், ஏழை, எளிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டம், கல்லூரிப் படிப்புடன் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கிடும் நான் முதல்வன் திட்டம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம், பஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்திட விடியல் பயணம் திட்டம், பெண்களுக்காக தோழி தங்கும் விடுதிகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த விளக்கப்படங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், நாமககல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 150-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் அடங்கிய தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வருகிற 15ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நாமக்கல் முனிசிபாலிட்டி சேர்மன் கலாநிதி, பிஆர்ஓ ராம்குமார், ஏபிஆர்ஓ (செய்தி) வடிவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.