மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவரப் பகுதியில் அமைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள விளைநிலங்களில் அவ்வப்போது காட்டு விலங்குகளான யானை,பன்றி, மான், மிளா, சிறுத்தை,கரடி போன்ற விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றது. விளை நிலைகளில் உள்ள பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைப்பதும், அதில் விலங்குகள் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களும் சிக்கி பலியாகுவதுண்டு.
இதுபோன்ற சம்பவம் ஒன்று தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதி சார்ந்தவர் முருகன். இவருக்கு கீழபுலியூர் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் தற்போது தென்னை மற்றும் வாழை பயிரிட்டுள்ளார்.
இப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் அரசுக்கு தெரியாமல் சட்டம் விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த மின்வேலியில் சிக்கி உயிர் இழந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.