/* */

திருத்தணி அருகே கார் மோதி தண்ணீர் கேன் ஏற்றுச்சென்றவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கேன் ஏற்றுச்சென்றவர் கார் மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே கார் மோதி தண்ணீர் கேன் ஏற்றுச்சென்றவர் உயிரிழப்பு
X

உயிரிழந்த அமுதன்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதன் ( வயது 36). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் குடிப்பதற்கு வீட்டிற்கு தேவையான குடிதண்ணீர் கேன் எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த அமுதன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயேல ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மா சத்திரம் போலீசார் சொடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது 4 மாத கைக் குழந்தை உள்ள நிலையில் தனியார் தொழிற்சாலை ஊழியர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 Dec 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!