/* */

இணையதளம் மூலம் வரிகள் செலுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு!

வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இணையதளம் மூலமாக செலுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், ஆணையர் அறிவிப்பு

HIGHLIGHTS

இணையதளம் மூலம் வரிகள் செலுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு!
X

வந்தவாசி நகராட்சி அலுவலகம் பைல் படம்

வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இணையதளம் மூலமாக செலுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், ஆணையர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த ராணி , திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு நகராட்சி ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஊட்டி தேர்வு நிலை நகராட்சி உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி வந்தவாசி நகராட்சி ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளருக்கு நகராட்சி தலைவர் ஜலால் , துணைத் தலைவர் சீனிவாசன் ,மேலாளர் ரவி ,பொறியாளர் சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையாளர் தெரிவிக்கையில்,

மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் பொதுமக்கள் எவ்வாறு செலுத்துகின்றார்களோ அதே போல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை முறைப்படி செலுத்த வேண்டும். இங்கு பெரும்பாலானவர்கள் நிலுவை வைத்துள்ளனர். அதேபோல் அதிக அளவில் நிலுவை வைத்துள்ளவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களை நேரடியாக எனது தலைமையிலான குழுவினர் நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட உள்ளோம்.

தவறும் பட்சத்தில் சொத்து ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் குறைவாக நிலுவைத் தொகை வைத்துள்ளவர்களை நான்கு வரி வசூலர்கள் தலைமையில் ஒவ்வொருவருக்கும் நாலு வார்டுகள் என பிரித்து வரி வசூலை தீவிர படுத்த உள்ளோம் . இதனை வருவாய் ஆய்வாளர், நகராட்சி மேலாளர் கண்காணித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.

நகராட்சிக்கு சொந்தமான கடை குத்தகைதாரர்கள் நிலுவைத் தொகையை உடனே செலுத்தி கடைக்கு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக செலுத்த பொது மக்களுக்கு அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதேபோல் அங்கேயே பணம் செலுத்தி தங்களது வரி கணக்கை நேர் செய்து கொள்ளலாம்.

மேலும் தங்களது நிலுவைத் தொகை விபரங்களையும் இணையதளம் மூலமாக பார்த்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து செல்போன் மூலமாகவும் வரி இனங்களை செலுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். வரி இனங்களை செலுத்துவதால் நகராட்சியின் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏதுவாக இருக்கும். எனவே பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தங்களது வரி இனங்களை நிலுவையின்றி பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Updated On: 14 Dec 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்