/* */

வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ முகாம்..!

வாடிப்பட்டி அருகே பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ முகாம்..!
X

வாடிப்பட்டி அருகே சித்தர் பீடத்தில் அன்னதானம்.

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டை, சாணாம்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர் பீட ஆலயத்தில் பதினெண் சித்தர்பீட அறக்கட்டளை சார்பாக சித்ரா பௌர்ணமியை யொட்டி யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர் பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

மதியம் 12 மணிக்கு அன்னதானமும், இலவச அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற்கை மருத்துவசிகிச்சை முகாமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் சு.தனபாலன் தலைமை தாங்கினார். விவசாய விஞ்ஞானி சி.ஆர். ராஜேந்திரன் அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.

மருத்துவ முகாமினை, திரைப்பட இயக்குநர் மாமல்லன் கார்த்தி தொடக்கி வைத்தார். முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பெ.விஜயபாஸ்கர் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில், மருத்துவர்கள் லிங்கு செல்வி தலைமையில் டாக்டர்கள் ஜோதி முனீஸ்வரி, வித்யா உள்ளிட்ட மருத்துவகுழுவினர் மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, கால்ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனைத்துவகை நோய்களுக்கும் மருத்துவசிகிச்சையளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். முடிவில், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.

Updated On: 24 April 2024 8:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!