/* */

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கு பாராட்டு விழா

கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்திய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர்  குழு தலைவருக்கு பாராட்டு விழா
X

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற, பாராட்டு விழாவில் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி பேசினார்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பான முறையில் நடத்திய, அறங்காவலர் குழு தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லமாது வெளிநாடுகளில் இருந்தும், தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சுமார் 1000 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்னர் 2,009ம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக கும்பாபிசேகம் நடத்திப்பட்டது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேக விழா கடந்த நவ.1ம் தேதி நடைபெற்றது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் மற்றும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி தலைமையில், கும்பாபிசேக விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேக விழாவை சிறப்பாக நடத்தி முடித்த, அறங்காவலர் குழு தலைவலரும், டிரினிடி மகளிர் கல்லூரி தலைவருமான நல்லுசாமிக்கு, நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரி செயல் இயக்குனர் அருணா செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசு பரமேஸ்வரன், கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Nov 2023 6:53 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  3. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  4. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  7. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  9. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்