/* */

பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு

பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு
X

ஸ்ரீதர்

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஸ்ரீதர் ( வயது 40). என்பவர் பொன்னேரியில் தமது பணியினை முடித்து ரயில் மூலம் கும்மிடிப்பூண்டி செல்ல நேற்றிரவு பொன்னேரி ரயில் நிலையம் சென்றார்.

கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்த போது அதே ரயில் மோதி ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டாம் எனவும், மாற்றாக ரயில்வே மேம்பாலங்களை பயன்படுத்திட வேண்டும் என ரயில்வே காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 31 Dec 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  3. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  4. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  5. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  6. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  9. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  10. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு