/* */

பேரூராட்சி தலைவர் கணவன் துணைத் தலைவர் இடையே தகராறு: இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு

ஆரணி பேரூராட்சி தலைவரின் கணவன் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் இடையே ஏற்பட்ட அடிதடி தகராறு காரணத்தினால் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பேரூராட்சி தலைவர் கணவன் துணைத் தலைவர் இடையே தகராறு: இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
X

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் தலைவியின் கணவர், துணை தலைவர் இடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரணி பேரூராட்சி தலைவரான ராஜேஸ்வரியின் கணவர் நவீன்குமாருக்கும், துணை தலைவர் சுகுமார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பினரும் அரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பேரூராட்சி தலைவியின் கணவர் நவீன்குமார் உள்ளிட்ட 4பேர், துணை தலைவர் சுகுமார் உள்ளிட்ட 4பேர் என இருதரப்பினர் மீது தனித்தனியே 2.வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடிதடி தகராறில் பேரூராட்சி தலைவியின் கணவர், துணை தலைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Oct 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு