/* */

பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது

பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இருந்த போன புதுப்பெண் கணவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது
X

பொன்னேரி அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் சார் ஆட்சியர் விசாரணையை தொடர்ந்து கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் சானார்பாளையத்தில் திருமணமாகி 11மாதங்களே ஆன ஆர்த்தி(எ) தனலட்சுமி (வயது 20). தற்கொலை செய்து கொண்டதாக நேற்று கணவர் முரளிகிருஷ்ணன் குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நேற்று புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பொன்னேரி போலீசார், சார் ஆட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனலட்சுமி மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கணவர் முரளிகிருஷ்ணன் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணைக்காக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடித்து பெண்ணின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சார் ஆட்சியர் விசாரணையை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் வழக்கு பதிந்து கணவர் முரளிகிருஷ்ணன் ( வயது 28) பொன்னேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Updated On: 24 Dec 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்