புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற இருவர் மீது வழக்குப்பதிவு
புழல் சிறையில் பார்வை நேரத்தில் கைதிகளுக்கு கஞ்சா கொடுக்க முயன்றதாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
முற்பகல் நேரத்தில் பார்வையாளர்கள் சிறை கைதிகளை நேர்காணல் அறையில் சந்தித்து பேசுவது வழக்கம். நேர்காணல் அறையில் கைதி ஒருவரை சந்தித்து விட்டு புறப்பட முற்பட்ட பார்வையாளர் ஒருவர் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலத்தை தூக்கி கைதியை நோக்கி வீசியுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்ததில் சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து 15கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பார்வையாளர் மணிராஜ், அடிதடி வழக்கில் சிறையில் இருக்கும் விசாரணை கைதி சௌந்தருக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் விசாரணை கைதி சௌந்தர், அவருக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற பார்வையாளர் மணிராஜ் ஆகிய இருவர் மீதும் 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புழல் சிறையில் உள்ள கைதிக்கு பொட்டலம் மூலம் கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.