/* */

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே 2 வாலிபர்களை துரத்தி வெட்டிய கும்பல்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இரண்டு வாலிபர்களை 4 பேர் கொண்ட கும்பல் துரத்தி வெட்டினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே 2  வாலிபர்களை துரத்தி வெட்டிய கும்பல்
X

அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே 2 வாலிபர்களை துரத்தி துரத்தி 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தப்பி ஓட முயன்று படுகாயமடைந்த இருவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் மதுபான கடை அருகே வெங்கத்தூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த மாதவன்( வயது 25) மற்றும் சீதா நகர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி ( வயது 31)ஆகிய இருவர் மதுபானம் வாங்குவதற்காக மதுபான கடை அருகே சென்றபோது அங்கு ஏற்கனவே இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கத்திகளுடன் அந்த கும்பல் முனுசாமி மற்றும் மாதவனை கொலை செய்ய துரத்தி உள்ளனர்.அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய இரு இளைஞர்கள் ரயில் நிலையம் அருகே 6 வது நடை மேடைக்கு வெளியே கோவில் பகுதியில் அவர்களை நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்து தலை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டு 108.ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடிய நபர்கள் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் உட்பட நான்கு பேர் என்பது தெரியவந்துள்ளது அவர்களைத் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

மதுபானம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டதா அல்லது முன்விரோதம் காரணமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார்களா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட ஓட இரண்டு நபர்களை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 Jan 2024 8:41 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?