/* */

திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ எரிக்கப்பட்டதால் பரபரப்பு

திருவள்ளூரில் முன் விரோதம் காரணமாக ஆட்டோ எரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வைரலானது. போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ எரிக்கப்பட்டதால் பரபரப்பு
X

ஆட்டோ தீப்பற்றி எரியும் சிசிடிவி காட்சி. 

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ எரிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வைரலானது. இதில் தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்,34.பிரபல ரவுடியான இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை புழல் சிறையிலிருந்து கோட்டாட்சியர் நன்னடத்தை விதியின் கீழ் வெளியே வந்துள்ளார். இவர் தற்போது வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு தனது வீடு அருகே உளள ஔவையார் தெரு பகுதியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று தூங்கியுள்ளார். மறுநாள் 7-ஆம் தேதி காலை எழுந்து பார்க்கும் போது ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது 7-ஆம் தேதி அதிகாலை 12:06 மணிக்கு மேல் மர்ம நபர் ஒருவர் ரவுடி சரவணன் ஆட்டோ அருகே நடந்து வந்து ஆட்டோக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்துவது தெரியவந்தது. மேலும் தீயிட்டு கொளுத்தியவர் எதுவுமே தெரியாதது போல் அந்த தெருவில் நடந்து செல்லும் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது ஆட்டோவை தீயிட்டு கொளுத்தியது சரவணன் உடன் ஆட்டோ ஓட்டும் நண்பர் குமரன் என தெரிய வந்தது.
இதுகுறித்த சரவணன் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் இருவருக்கும் தககராறு நடந்துள்ளது. அந்த முன் விரோதம் காரணமாக குமரன் தனது ஆட்டோவை தீயிட்டு கொளுத்தியதாக புகார் அளித்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆட்டோவை தீயிட்டு கொளுத்திய குமரனை தேடிவருகின்றனர்.
Updated On: 16 Feb 2024 7:06 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...