திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டடம் தேர்வு, பூங்கா அமைத்ததற்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்மானது நகராட்சி தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை கொடுத்ததற்காகவும் அப்பகுதியில் பூங்காக்கள் அமைத்து கொடுத்தமைக்காகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு கவுன்சிலர் ஜான் நன்றிகளை தெரிவித்தனர்.
மேலும் கவுன்சிலர்கள் முன் வைத்துள்ள பல்வேறு கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ,திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் வசந்தி வேலாயுதம்,சுமித்ரா வெங்கடேசன், லீலாவதி பன்னீர், அம்பிகா ராஜா, பிரபாகரன், பிரபு, சாந்தி கோபி, அயிப்அலிஃப்,டி கே பாபு, வி இ ஜான் தாமஸ், பத்மாவதி வீரா, அருணா கிருஷ்ணன், செந்தில்குமார், இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா நரேஷ், கந்தசாமி,விஜயகுமார் கமலி, சித்ரா விஸ்வநாதன், ஆனந்தி, செந்தில், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.